எம்.ஜூ.ஆர் 107வது பிறந்தநாள் விழா -திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

by Admin / 17-01-2024 04:14:03pm
 எம்.ஜூ.ஆர் 107வது பிறந்தநாள் விழா  -திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜூ.ஆர் 107வது பிறந்தநாள் விழா இன்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஆலோசனைப்படி கோவில்பட்டி நகர செயலாளர் விஜய் பாண்டியன் தலைமையில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே உள்ள அமைந்துள்ள புரட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜூ.ஆர்,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் பேரறிஞர் அண்ணா, உள்ளிட்டோரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி அருகே 

இனாம்மணியாட்சி மேற்கு ஒன்றிய சார்பில் மேற்கு ஒன்றிய சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜூ.ஆர் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி பண்ணத்தோட்டம் தெருவில் 15வது வார்டில் எம்ஜிஆர் மன்ற நகரச் செயலாளர் முருகன் தலைமையில் நகர செயலாளர் விஜய பாண்டியன் முன்னிலையில் அதிமுக கட்சி கொடியேற்றி எம்.ஜூ.ஆரின் திரு உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், கிளை செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் திரு உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

Tags :

Share via