சொம்பு வைத்து போராட்டம் நடத்திய காங்கிரஸ்

by Staff / 22-04-2024 01:34:26pm
சொம்பு வைத்து போராட்டம் நடத்திய காங்கிரஸ்

மத்திய அரசு கர்நாடகாவுக்கு எதுவும் தராமல், வெறும் சொம்பு மட்டுமே கொடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் வைத்தது. இதை வைத்து அக்கட்சியினர் போராட்டம் மேற்கொண்டனர். அதன்படி, பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்திற்காக கர்நாடகா வந்த போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு மேக்ரி சதுக்கம், மைசூரு வங்கி சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், மாவட்ட தலைநகரங்களிலும் சொம்பு வைத்து போராட்டம் நடத்தினர் அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.

 

Tags :

Share via