தமிழக அரசு மீண்டும் கொண்டு வரும் மஞ்சள் பை

by Admin / 23-12-2021 04:26:05pm
தமிழக அரசு மீண்டும் கொண்டு வரும் மஞ்சள் பை

தமிழக அரசு மீண்டும் கொண்டு வரும் மஞ்சள் பை

 நெகிழி பைகளால்  மனிதர்களுக்கு மட்டுமின்றி மண்ணின் வளத்தை கெடுக்கிறது என்பதால், நெகிழி உபயோகத்தை அரசு தடை செய்திருந்தது.இருப்பினும்,பல்வேறு நிலைகளில்நெகிழியின் உபயோகம் தொடர்ந்து கொண்டுதானிருந்தது. இதை அறவே அகற்ற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு மீண்டும் மஞ்சள் துணிப்பையை  பயன்படுத்த வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும்
விதமாக இன்று கலைவாணர் அரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  சுற்றுச்சூழல்,வனத்துறை சார்பாக நடக்கும் நிகழ்ச்சியில்  மஞ்சள் பையை பொதுமக்கள்பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தினார். கலைவாணர் அரங்கில் மாற்றுப்பொருட்கள் தயாரிக்கும் கண்காட்சியையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்,"மஞ்ச பை சுற்று சூழலுக்கு உகந்தது.மஞ்சள் பை வைத்திருந்தால் அவமானம் என்ற மன நிலை மாற்ற வேண்டும்.சினிமாவில் மஞ்ச பை வைத்திருந்தால் கிராமத்தான் என்று அடையாளப்படுத்தும்மனோநிலை மாறவேண்டும்.மஞ்ச பை அவமானமல்ல. சுற்று சூழலின் அடையாளம்" என்றார்.

 

Tags :

Share via