ரஷியாவில் விற்பனையை நிறுத்தியது பெப்சி, கோக் நிறுவனங்கள்

by Admin / 09-03-2022 12:16:20pm
ரஷியாவில் விற்பனையை நிறுத்தியது பெப்சி, கோக் நிறுவனங்கள்


உக்ரைன் மீது ரஷியா 14வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள் உள்பட பலர் உயிரிழந்து உள்ளனர்.

ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் அரசும் ரஷியாவிற்கு ஈடுகொடுத்து வருகிறது.
 
உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் ஆப்பிள், லிவிஸ், நெட்பிளிக்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் தங்களது சேவையை ரஷியாவில் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. 
    
இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போர் எதிரொலியாக ரஷியாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக கோகோ கோலா மற்றும் பெப்சி போன்ற குளிர்பான நிறுவனங்களும் அறிவித்துள்ளன. 
 

 

Tags :

Share via