விருதுநகரில் விதிமுறைகளை மீறி இயங்கியதாக 174 பட்டாசு ஆலைகள் உரிமம் தற்காலிகமாக ரத்து

by Staff / 20-05-2022 04:24:34pm
விருதுநகரில் விதிமுறைகளை மீறி இயங்கியதாக 174 பட்டாசு ஆலைகள் உரிமம் தற்காலிகமாக ரத்து

விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறியதாக 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பேரியம் உப்பு கலந்த பட்டாசு மற்றும் சரவெடிகளை   தயாரிக்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை முறையாக பின்பற்றப் படுகிறதா என சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டு 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதோடு 56 விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வீதி மீறல்களில் ஈடுபடும் அலைகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் ஆட்சியர் மேகநாத ரெட்டி.எச்சரிக்கை விடுத்துள்ளார் 

 

Tags :

Share via