கண்ணதாசன் பிறந்தநாள் - அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை

by Editor / 24-06-2021 05:22:47pm
கண்ணதாசன் பிறந்தநாள் - அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை

 


கவியரசு கண்ணதாசன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழக அரசின் சார்பில், அமைச்சர்கள்,  மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
, தொழில்துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு,  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி,  ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,  இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு,  ஆதி திராவிடர்  நலத்துறை அமைச்சர்.என்.கயல்விழி செல்வராஜ், தென்சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள், ஜெ.. கருணாநிதி, த.வேலு,  சீர்மிகு பெருமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு, தனிமனித இடைவெளியைப் பின்பற்றி மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் கவியரசு கண்ணதாசன் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via