இருதரப்பினரும் கற்களை வீசி ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் துறையூர் பகுதியில் இரு பிரிவினர் இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருதரப்பினரும் கற்களை வீசி ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தி உள்ளனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இவர்களை தடுக்க முயன்றுள்ளனர். ஆனால் இந்த தாக்குதலில் காவல் ஆய்வாளர் உள்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கடலூர் பகுதியில் நீடித்த பதற்றம் காரணமாக, கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தலைமையில் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
Tags :