மகனைக் கொன்று சாக்கு மூட்டைக்குள் மறைத்து வைத்த தந்தை
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கோண்டா காவல் நிலையத்துக்கு உட்பட்ட தாராபூர் கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான ரவி என்பவர் கடந்த 14ஆம் தேதி குடித்துவிட்டு தனது தந்தை ஜெயபிரகாஷுடன் தகராறு செய்துள்ளார்.அதன் பிறகு அவர் திடீரென காணாமல் போய் உள்ளார். தனது மருமகன் ரவி காணாமல் போனது குறித்து மாமா போலீசில் புகார் அளித்தபோது உண்மை தெரியவந்தது. போலீசார் ஜெயபிரகாஷின் வயலில் சாக்கு மூட்டையில் கட்டி வைத்திருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags :