நள்ளிரவில் வீட்டை கொளுத்திய பயங்கரம்

by Staff / 14-01-2023 01:02:26pm
நள்ளிரவில் வீட்டை கொளுத்திய பயங்கரம்

டெல்லியில் ஒரு குடும்பத்தை மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து கொல்ல முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இம்மாதம் 8ஆம் தேதி பஜன்பூர் வினய் பூங்கா அருகே நடந்த பயங்கர சம்பவம் தொடர்பான காட்சிகள் வைரலாக பரவியது. நபீஸ் மாலிக் என்பவரது குடும்பத்தினர் இரவில் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டில் சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர். உடனே கண்விழித்த அவர்கள் வீட்டின் பின் வாசல் வழியாக தப்பினர். பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via