சிறுமியை கர்ப்பமாக்கியவனுக்கு 20 ஆண்டு சிறை

by Staff / 21-01-2023 04:50:27pm
சிறுமியை  கர்ப்பமாக்கியவனுக்கு 20 ஆண்டு சிறை

சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் பவனமங்கலம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கௌதமன் (வயது 40), செங்கல் சூளை தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் 2018 ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு 15 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வல்லுறவு செய்தார். இதனால் கர்ப்பமான அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்றும், அதனால் திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும் கௌதமன் மறுத்துவிட்டார். இதுகுறித்து திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் காவல்துறையினர் 2018 டிசம்பர் 6ஆம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கௌதமனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு தஞ்சை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்ராஜன் கௌதமனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25, 000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் இழப்பீடு வழங்குமாறு பரிந்துரை செய்தார்.

 

Tags :

Share via