பூட்டிய வீட்டில் தீ- பொருட்கள் நாசம்

by Staff / 28-01-2023 04:36:40pm
பூட்டிய வீட்டில் தீ- பொருட்கள் நாசம்

கோவை அடுத்து கோவில்பாளையம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி 40 வயதான பாக்கியலட்சுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சமையல் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் உள்ள அனைவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பாக்கியலட்சுமிக்கு தகவல் தெரிவித்து விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த துணிகள், 2 டி. வி. க்கள் மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்க ஆகியவை எரிந்து நாசமானது. இதுகுறித்து பாக்கியலட்சுமி கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via