துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பரிதாப பலி
மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெரெஸ் நகரில் உள்ள இரவு விடுதியில் ஆயுதம் ஏந்திய நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொலைவெறி தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்தனர். மேலும் ஐவர் பலத்த காயம் அடைந்தனர். இரண்டு வாகனங்களில் ஏராளமான ஆயுதங்களுடன் எல்வானடிட்டோ இரவு விடுதிக்கு வந்த தாக்குதல்காரர்கள் அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கோர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
Tags :