மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவன் தற்கொலை

by Staff / 02-04-2023 01:30:40pm
மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவன்  தற்கொலை

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் ஒளிகை தெருவை சேர்ந்தவர் குமார் (43). தொழிலாளி. குமாரின் மனைவி மாரியம்மாள். இவர்கள் இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது. 6 மாதத் இற்கு முன்பு குமாரிடம் கோபித்து கொண்டு மாரியம்மாள் வீட்டை விட்டு சென்று விட்டார்.இதனால் மனவேதனை அடைந்த குமார் மது அருந்தி விட்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கள்ளப்பெரம்பூர் காவல்துறையினர் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via