ராணுவ வீரர் உடல் தமிழகம் வந்தடைந்தது.உறவினர்கள் போராட்டம்.

by Editor / 14-04-2023 01:56:04pm
ராணுவ வீரர் உடல் தமிழகம் வந்தடைந்தது.உறவினர்கள் போராட்டம்.

பஞ்சாபில் ராணுவ முகாமில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தமிழக வீரர் யோகேஷ்குமார் உடல் மதுரை வந்தடைந்தது.டெல்லியில் இருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட அவரது உடல், சொந்த ஊரான தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.ராணுவ வீரரின் உடல் வருவதை ஒட்டி, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.இந்த நிலையில் அவரது மரணம் குறித்து அவரது உறவினர்கள் விளக்கம் கேட்டுவருகின்றனர்.மேலும் தேவாரத்தில் ராணுவ வீரர் யோகேஷ்குமாரின் உடலை அரசு மரியாதை வழங்கி நல்லடக்கம் செய்திட வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள், ஊர் பொதுமக்கள் போராட்டம்.ராணுவ மரியாதை வழங்கவில்லை என்றால் சடலத்தை அடக்கம் செய்யப்போவதில்லை என கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.தேனி மாவட்ட ஆட்சியர், உத்தமபாளையம் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் வர வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதால் தேவாரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via