தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது:  அமைச்சர் ராஜகண்ணப்பன்

by Editor / 14-07-2021 03:44:39pm
 தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது:  அமைச்சர் ராஜகண்ணப்பன்


பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தபோதும் தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
முதலமைச்சரின் உத்தரவின்படி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் இயங்கிவரும் சாலைப் போக்குவரத்து நிறுவன பயிற்சி மையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கும்மிடிபூண்டியில் புதிய பணிமனைக்கு இடம் தேர்வு செய்தல் ஆகியவற்றை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
பின்பு, அமைச்சர் ன்செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது: -
முதலமைச்சரின் உத்தரவின்படி, அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் நடைமுறை யானது அமுலுக்கு வந்தபோது, பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவிகிதத்திலிருந்து 60 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இயக்கப்படும் சாதாரணக் கட்டணப் பேருந்துகளின் எண்ணிகை ஏறத்தாழ 6,000 லிருந்து 7,291 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பயணம் செய்யும் எண்ணிக்கையை அறிந்து கொள்ளும் வகையில், மகளிர், மாற்றுத்திறனாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் திருநங்கையர்கள் ஆகியோர்களுக்கு கட்டணமில்லா பயண சீட்டு வழங்கப்படுகிறது.
கொரோனா தொற்று காரணமாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஏறத்தாழ, 19,700 பேருந்து களில் தற்பொழுது 15,627 பேருந்துகள் படிப்படியாக இயக்கப்படுகின்றன. மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2,650 பேருந்துகள் இயக்கப்படு கின்றன. நிர்பயா திட்டத்தின் கீழ், மாநகர் போக்குவரத்துக் கழக 2,800 பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பேருந்துகளின் ஆயுட்காலமானது புதிய திட்டத்தின்படி, 12 வருடங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பழைய பேருந்துகளின் எண்ணிகை படிப்படியாக குறைக்கப்பட்டு, 2,000 டீசல் பேருந்துகள் வாங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் உதவியுடன், மின்சாரப் பேருந்துகள் வாங்கிடவும் ஏற்பாடு செய்யப்படும்.திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கும்மிடிபூண்டியில், 4 ஏக்கர் 70 சென்ட் பரப்பளவில் நிலம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இங்கு பணிமனை அமைப்பது தொடர்பாக முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து முடிவு எட்டப்படும்.கொரோனா காலக்கட்டங்களில் நிறுத்தப்பட்ட அனைத்து பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் இயக்கப்படும். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்களின், 14-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக, முதலமைச்சரின் ஒப்புதலை பெற்று, கூடிய விரைவில் சுமூகமான முடிவு எட்டப்படும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வாக இருந்தாலும், பொதுமக்களின் நலன் கருதி பேருந்துகளின் பயண கட்டணம் தற்போது உயர்த்தப்படமாட்டாது.பயணிகளுக்கு குடிநீர் வழங்கும் பிளான்ட் கும்மிடிப்பூண்டியில் ஒரு வருட காலமாக செயல்படாமல் உள்ளது. மீண்டும் இயக்கி பயணிகளுக்கு 1 லிட்டர் பாட்டில், 1/2 லிட்டர் பாட்டில் வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சார் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

 

Tags :

Share via