நிபா வைரஸ் - கேரளாவில் இன்று ஆய்வு

by Staff / 13-09-2023 02:02:34pm
நிபா வைரஸ் - கேரளாவில் இன்று ஆய்வு

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் கடந்த 2018-ம் ஆண்டு முதல் பரவ தொடங்கியது. இதுவரை நிபா வைரஸ் பாதிப்பால் சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நிபா வைரஸ் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய புனேயில் இருந்து 2 குழுக்கள் இன்று கேரளாவிற்கு வருகின்றனர். சென்னையில் இருந்து தொற்றுநோயியல் நிபுணர்கள் குழுவும் இன்று ஆய்வுக்கு வருகிறது. மேலும், கேரள மாநில அரசு சார்பில் 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிப்பை கண்டறிந்த 2 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via