தென்காசி மாவட்டத்தில் இன்றும் நாளையும் தமிழக ஆளுநர் ரவி சுற்றுப்பயணம்
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செப்டம்பர் 28மற்றும் 29 தேதிகளில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுற்றுப்பயணம் மேற்கொள்ளஉள்ளார்.
28 ஆம் தேதி இன்று
---------------
1. 3.35 - 4.30 மாலை : குற்றாலத்தில் உள்ள கே.ஆர் டைகர் ரிசார்டில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழில் முனைவர்களுடன் கலந்துரையாடல்.
2. 4.55 -5.10 மாலை ஆழ்வார்குறிச்சியில் பாரம்பரிய பானைகள் தயாரிக்கும் தொழிலாளர்களுடன் சந்திப்பு.
3. 5.20 -5.55 மாலை அவ்வை ஆசிரமத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் பணியாளர்களுடன் சந்திப்பு.
4. 6 - 6.20 மாலை சிவ சைலத்தில் உள்ள சிவ சைலபதி கோவிலில் தரிசனம்.
5. 6.30 மாலை கோவிந்த பேரியில் உள்ள ZOHO கிராமத்திற்கு செல்கிறார்.
29 ஆம் தேதி
--------------------
1. 10.30 -11 காலை வாசுதேவநல்லூர் அருகிலுள்ள நெற்கட்டும் சேவல் கிராமத்திலுள்ள பூலித்தேவர் அரண்மனையில் பூலித்தேவரின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்துகிறார் மற்றும் பச்சேரியில் உள்ள வெண்ணி காலாடி, ஒண்டிவீரன் அவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.இதனைத்தொடர்ந்து.இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டத்தில் 3 ஏ டி எஸ் பி.க்கள், 9 டி.எஸ்.பி.க்கள், 29 ஆய்வாளர்கள், 100 உதவி ஆய்வாளர்கள், 993 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags : தென்காசி மாவட்டத்தில் இன்றும் நாளையும் தமிழக ஆளுநர் ரவி சுற்றுப்பயணம்