ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கொள்ளை முயற்சி.
சிக்கிம் மாநிலத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் பால் டேனியேல் தினகரன். இவர் தற்போது சென்னையில் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான விடு அரக்கோணத்திலும் உள்ளது. இந்த வீட்டின் பின்பக்கம் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் மேலும் உள்ளே இருந்த இரண்டு கதவுகளை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் எந்த விதமான பொருட்களும் இல்லாததால் திரும்பிச் சென்றுள்ளார். மேலும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அரக்கோணம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து அரக்கோணம்.நகர காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவல்துறை தரப்பில் கைரேகைகளை பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்கள். மேலும் கொள்ளை அடிக்க ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். அரக்கோணம் நகரில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு மற்றும் வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Tags : ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கொள்ளை முயற்சி.