மேல்மருவத்தூரில் திடீரென சந்தித்துக் கொண்ட இரண்டு தலைவர்கள். 

by Editor / 23-10-2023 11:08:56pm
மேல்மருவத்தூரில் திடீரென சந்தித்துக் கொண்ட இரண்டு தலைவர்கள். 

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் திடீர் உடல்நல குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.அவரது உடல் அரசு மரியாதை உடன் பக்தர்கள் அஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு  தினசரி பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இறுதி சடங்கிற்கு வராத பிரமுகர்கள் தற்போது நேரில் வந்து அவரது மகன்கள் அன்பழகன் மற்றும் செந்தில்குமாரை விசாரித்து  ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  விடுதலை  சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று நேரில் வந்து பங்காரு அடிகளார் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பூஜைகள் மேற்கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
இதனை முடித்துக் கொண்டு வெளியே வந்த போது பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பிரதமர் மோடி அழுத்தி அனுப்பிவைத்த இரங்கல் கடிதத்தை வழங்குவதற்காக அங்கு வருகை புரிந்ததை பார்த்து,  இருவரும் நேரில் பரஸ்பர நட்பு  பரிமாறிக்கொண்டு  பாஜக தலைவர்  அண்ணாமலையிடான் குழந்தைகளின் கல்வி குறித்தும் விசிக தலைவர் திருமாவளவன் ஆரத்தழுவிக்கொண்டு நேரில் சந்திக்க வேண்டுமென நினைத்ததாக தெரிவித்து நலம் விசாரித்துக்கொண்டார்.மேலும் சில வார்த்தைகள் பேசி  கொண்டனர்.இதனைப் பார்த்த இரு கட்சிினரும் மகிழ்ச்சி கொண்டனர். 

 

Tags : மேல்மருவத்தூரில் திடீரென சந்தித்துக் கொண்ட இரண்டு தலைவர்கள். 

Share via