வெள்ளம் பாதித்த பகுதிகளில் டிசம்பர் 11ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.

by Editor / 08-12-2023 07:52:40am
வெள்ளம் பாதித்த பகுதிகளில் டிசம்பர் 11ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாணவர்கள், மாணவிகளின் நலன் கருதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகள், செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், பள்ளி, கல்லூரிகள், திருவள்ளூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிசம்பர் 8) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 11ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via