சகோதரிக்கு ஆசையாய் டிவி.. கணவனை கொன்ற மனைவி

by Staff / 24-04-2024 04:05:52pm
சகோதரிக்கு ஆசையாய் டிவி.. கணவனை கொன்ற மனைவி

உ.பி, மாநிலம் பார்ப்பக்கியை சேர்ந்தவர் மிஸ்ரா(35). இவர் தனது சகோதரியின் திருமணத்திற்கு தங்க மோதிரம் மற்றும் டிவி வாங்கிக்கொடுக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து தனது மனைவி சபியிடம் அவர் கூறியுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. பின்னர் சபி தனது சகோதரர்களுக்கு ஃபோன் செய்து அவருக்கு பாடம் புகட்ட சொல்லியுள்ளார். இதனையடுத்து மிஸ்ரா வீட்டிற்கு வந்த அவர்கள் மிஸ்ராவை ஒரு மணி நேரம் கம்பால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மிஸ்ரா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் மனைவி, சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via