சேலைக்காக மகனை அந்தரத்தில் தொங்கவிட்ட தாய்
ஹரியானாவின் ஃபரிதாபாத் ஹைரைஸில் உள்ள 10-வது மாடியின் பால்கனியில் ஒரு தாய் தனது மகனை அந்தரத்தில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதில் மகன் பெட்ஷீட்டில் அந்தரத்தில் தொங்கியபடி உள்ளார்.ஒன்பதாவது மாடியில் பூட்டிய வீட்டின் பால்கனியில் விழுந்த புடவையை எடுக்க, தாய் ஒருவர் தனது மகனை பெட்ஷீட்டில் 9 மாடி பால்கனிக்கு அனுப்பி, பின்னர் அவரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் இழுக்கும்போது மகன் பெட்ஷீட்டில் ஏற்றுகின்றனர்.
கடந்த வாரம் ஃபரிதாபாத்தில் உள்ள செக்டார் 82 இல் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை எதிர் கட்டிடத்தில் வசிக்கும் ஒருவர் படம் பிடித்துள்ளார்.
ஒரு புடவைக்காக மகனின் உயிரை பற்றி கவலைப்படாமல் தாய் செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags :