கோயில் நில ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய அறநிலைத்துறை தூங்குகிறது உயர்நீதிமன்றம் அதிருப்தி
கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய அறநிலைத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக் கொண்டிருப்பதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பொன்னேரி காளீஸ்வரர் கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி உத்தரவை அமல்படுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதன் விசாரணையில் 18 இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் 14 இடங்களில் அகற்றப்பட்டுள்ளதாக அறநிலை துறை தெரிவித்தது. வரலாற்று சிறப்புமிக்க பல கோவில்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது அறநிலை துறை அதிகாரிகள் செயல்படாத நிலையே காரணம் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
Tags :