5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

by Staff / 05-04-2023 12:04:32pm
5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சென்னை நங்கநல்லூர் அருகே எம்எம்டிசி காலனியில் உள்ள தருமேஸ்வரர் கோவிலில் இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டும் நிகழ்வின்போது 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த நிகழ்வில் 25-க்கும் மேற்பட்ட கோவில் அர்ச்சகர்கள் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டினர். அப்போது ஒருவர் குளத்தில் மூழ்கிய நிலையில், அவரை காப்பாற்ற சென்றவர்கள் அடுத்தடுத்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via