பெண் போலீஸ்க்கு பாலியல் வன்கொடுமை
உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயிலில் பெண் காவலரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தி ரயில் நிலையத்தில் சராயு விரைவு ரயிலில் பெண் போலீஸ் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெண் காவலரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அணுமதித்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், ஆடைகள் களையப்பட்டுள்ளதால் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :