வடக்கு காஸா மக்கள் வெளியேற பச்சைக்கொடி

by Staff / 14-10-2023 02:35:26pm
வடக்கு காஸா மக்கள் வெளியேற பச்சைக்கொடி

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே 7-வது நாளாக உச்சக்கட்ட போர் நாள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில், காலை 10 முதல் மாலை 4 மணி வரை பாலஸ்தீனியர்கள் வடக்கே பெய்ட் ஹனூனில் இருந்து தெற்கே கான் யூனிஸ் வரை செல்லலாம் என இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 6 மணி நேரம் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வழித்தடங்களில் தாக்குதல் நடத்தப்போவதில்லை. உங்கள் மீதும்... உங்கள் அன்புக்குரியவர்கள் மீதும் அக்கறை இருந்தால் தெற்கே செல்லுங்கள் என இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via