சீனாவில் தொற்று.. இந்தியாவில் 6 மாநிலங்கள் எச்சரிக்கை

by Staff / 29-11-2023 01:27:03pm
சீனாவில் தொற்று.. இந்தியாவில் 6 மாநிலங்கள் எச்சரிக்கை

சீனாவில் குழந்தைகளிடையே சுவாச தொற்று சமீப காலமாக கவலையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுகாதார முன்னெச்சரிக்கைக்காக மாநிலங்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாடு முழுவதும் 6 மாநிலங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத், உத்தரகாண்ட், ஹரியானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தங்கள் சுகாதார அமைப்புகளை எச்சரித்துள்ளன. மாநிலத்தில் சுவாச பிரச்சனைகள் தொடர்பான பாதிப்புகளை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via