குடிநீர் தொட்டியில் கிடந்த நாய் குட்டியின் சடலம்

by Staff / 23-02-2024 01:50:27pm
குடிநீர் தொட்டியில் கிடந்த நாய் குட்டியின் சடலம்

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்துள்ளது துட்டம்பட்டி ஊராட்சி. இதற்குட்பட்ட பகுதியில் ஆட்டையான்வளவு கிராமம் உள்ளது. இந்த பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து அருகில் இருக்கும் ஊர்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் நீர் திறந்துவிடும் ஆபரேட்டர் டேங்க் மேல் ஏறி பார்த்துள்ளார். அப்போது உள்ளே நாய் குட்டியின் சடலம் மிதந்துகொண்டிருத்துள்ளது. இதுகுறித்து ஊர் மக்களிடம் கூறியுள்ளார். பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் வந்த போலீசார் நாய் குட்டியின் சடலம் எப்படி தொட்டிக்குள் வந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via