திகார் சிறையில் அடைக்கப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்

by Staff / 01-04-2024 05:33:57pm
திகார் சிறையில் அடைக்கப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்

மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனிடையே, கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்றுடன் காவல் முடிந்ததால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டது. இந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Tags :

Share via