குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைந்தது.சிற்றருவி மூடல்.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த பத்து தினங்களாக மழை இல்லாத நிலை நீடித்து வருகின்றது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி. ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் கூட்டம் விடுமுறை காலம் என்பதால் அதிகளவில் குவிந்தாலும், குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவியில் நீர்வரத்து குறைந்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதியில் உள்ள நீர் நிலைகளை தேடி சென்ற வண்ணம் உள்ளனர், வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சிற்றருவி நீர்வரத்து இல்லாததன் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என தகவலை வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர் வரத்து இருந்தால் மட்டுமே சிற்றருவி திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :