27 பேர் கட்டிப்போட்டு சுட்டுக்கொலை அதிர்ச்சி தகவல்

by Staff / 19-10-2022 01:30:41pm
27 பேர் கட்டிப்போட்டு சுட்டுக்கொலை அதிர்ச்சி தகவல்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் தலிபான் அமைப்புக்கு எதிராகவே ஆப்கானிஸ்தானில் சில கிளர்ச்சி படைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த கிளர்ச்சி படைகளை ஒடுக்குவதில் தலிபான்கள் தீவிரம் காட்டுகின்றனர். அந்த வகையில் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் கடந்த மாதம் நடந்த சண்டையில் 40 கிளர்ச்சியாளர்களை கொன்றதாகவும், நூறுக்கு மேற்பட்டவர்களை சிறை பிடித்ததாகவும் தாலிபான் அமைப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் அந்த கைதிகளில் 27 பேரை கை, கால்களை கட்டுப்போட்டு கொடூரமான முறையில் தாலிபான் அமைப்பினர் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை தலைமையாக கொண்டு செயல்படும் விசாரணை அமைப்பு ஒன்று இதுகுறித்த அதிர்ச்சிகரமான வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.
 

 

Tags :

Share via